×

கோரஞ்சால் பகுதியில் சேறும் சகதியுமான நடைபாதை

 

பந்தலூர்,ஜூன்16: பந்தலூர் அருகே சேரம்பாடி கோரஞ்சால் பகுதியில் சேறும் சகதியுமான காங்கிரீட் நடைபாதையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி கோரஞ்சால் அண்ணாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வரும் காங்கிரீட் நடைபாதை கடந்த சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது.

தற்போது அந்த நடைபாதை பழுதடைந்து மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்லமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அப்பகுதியில் பல இடங்களில் நடைபாதை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.போதிய அடிப்படை வசதிகள் இல்லாத அப்பகுதியில் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நடைபாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோரஞ்சால் பகுதியில் சேறும் சகதியுமான நடைபாதை appeared first on Dinakaran.

Tags : Koranchal ,Bandalur ,Cherampadi Koranjal ,Pandalur… ,Koranjal ,Dinakaran ,
× RELATED பந்தலூர் கருமாரியம்மன் கோவில்...